ஓ இதுவொரு
மகா அழுகை
ஒரு துளி
கண்ணீரின் முன்
இந்த உலகத்தில்
ஒன்றுமே இல்லை .
ஆனால் அம்மா
,
எப்போதும்
எழாத வெளியினில்
தீரா தாகத்துடன்
காத்திருப்பர்
,
ஒரு மகா
யுகத்தின் தலைப் பிள்ளைகள்
ஒரு மகா
யுகத்தின் வீர புருஷர்கள்
ஒரு மகா
யுகத்தின் மகா தாகிகள்
காற்றில்
தாங்காது வழிகிறது பாடல்
கற்பூரத்
தீயில் ஒழுகும் கண்ணீர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக