புதன், 28 செப்டம்பர், 2016

காற்றாலயம்



ஓ இதுவொரு மகா அழுகை
ஒரு துளி கண்ணீரின் முன்
இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை .

ஆனால் அம்மா ,
எப்போதும் எழாத வெளியினில்
தீரா தாகத்துடன்
காத்திருப்பர் ,
ஒரு மகா யுகத்தின் தலைப் பிள்ளைகள்
ஒரு மகா யுகத்தின் வீர புருஷர்கள்  
ஒரு மகா யுகத்தின் மகா தாகிகள்

காற்றில் தாங்காது வழிகிறது  பாடல்

கற்பூரத் தீயில் ஒழுகும் கண்ணீர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக