புதன், 13 செப்டம்பர், 2017

அருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல




கோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களுக்கு இங்கு என்ன நடக்கிறதென்றாவது தெரியுமா? இலங்கையில் நின்று கொண்டு அதன் ஜனாதிபதியிடம் தனக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு விட்டதென்று புலம்பியிருக்கும் இந்த முதுகெலும்பில்லாத போலி, அவரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கிறார்.

சாதாரண மக்கள் ஜனாதிபதியைச் சந்திக்க நூறு நாளாவது தெருவில் குந்தியிருக்க வேண்டியிருக்கிறது, அதுவும் கூட நடப்பது அசாத்தியம். இங்கு எதற்கும் வக்கில்லாமல் இந்த மக்களின் துயரங்களுக்கும் இழப்புகளுக்கும் நீதி கேட்டு எழுத்தாளர்கள்  எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்ட அப்பாவி,  மைத்திரி பால சிரிசேனாவை ஜாலியாக சந்தித்து புத்தக கையளிப்பை நிகழ்த்தியிருக்கிறார். வாவ். இந்த நாட்டில் யாரின் கருத்து சுதந்திரத்தை யார் பாதுகாப்பது.

அருளினியனின் புத்தகத்திற்கெதிரான மிரட்டல்கள் கண்டிக்கப் பட வேண்டியது. ஆனால் அதனை அருளினியனே நியாயப்படுத்திவிட்டு சிரித்துக்கொண்டிருக்கிறார். தயவு செய்து இதுபோன்ற போலிகளை எழுத்தாளர்கள் என்று அடைப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அருளினியன், நீங்கள் சமர்ப்பணம் செய்திருப்பது போராளிகளுக்கு - சந்தித்து சிரிப்பது கொலைகாரர்களுடன், உங்களுக்கு ஏதாவது தகுதியிருக்கிறதென்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு நடந்த மிரட்டல்களைப் பற்றியும் அதற்கு எதிரான எனது கருத்துக்களையும் அண்மையில் நிகழ்ந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருந்தேன். ஆகவே இப்பொழுது உங்களின் கருத்துக்களுக்கெதிராகவும் பேசவேண்டியிருக்கிறது. இலங்கை ஒன்றும் அவ்வளவு ஜனநாயக நாடல்ல. மைத்திரி கருத்துசுதந்திரத்தை காப்பாற்றும் ' ஐயாவும்' அல்ல. நீங்கள் அவரை சந்தியுங்கள் புத்தகத்தை வெளியிடுங்கள் அது உங்களின் இஷ்டம். ஆனால் கருத்து சுதந்திரம் தேவை என்று நாங்கள் இங்கே தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருப்பது அதிகாரத்தின் வேட்டிக்குள் நின்றுகொண்டு எழுத்துவதற்கல்ல. இங்கு சாதியும் மதமும் பிரச்சினை தான், ஆனால் அதற்கெதிரான எங்களின் குரலென்பதை இதுவரை பாதுகாப்பது எங்களின் எழுத்துக்களே, அதற்காக தாக்கப்பட்டாலும் கூட அப்பம் சாப்பிட அலரிமாளிகைக்குச் செல்ல மாட்டோம். நீங்கள் செய்திருப்பது கருத்துக் சுதந்திரம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் குரலுக்காகவல்ல.

நீங்கள் செய்துகொண்டிருப்பதற்குப் பெயர் பொறுக்கித்தனம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக