புதன், 28 செப்டம்பர், 2016

கட்டுரை புத்தகங்களை பரிந்துரை செய்யலாம் என்றால் ,அது இனம் வாரியாய் வகை வாரியாய் பிரிக்க வேண்டும் ,அது ஒரு நீண்ட வேலை .இப்போது  முக்கியமானவற்றை பதிகிறேன் .

தாஸ்தவேஸ்கியின் நினைவுக் குறிப்புகள் அன்னா எழுதியது .நல்ல மற்றும் சிறிய புத்தகம் 

நினைவின் நதியில் -சுந்தர ராமசாமி பற்றி ஜெயமோகன் எழுதியது .எனக்கு மிக பிடித்த நினைவுக் குறிப்பு புத்தகம் ,ஒரு நாவல் மாதிரியே இருக்கும் .

சேகுவராவின் மோட்டார் சைக்கிள் டயரிக் குறிப்புகள் .ரொம்ப நல்ல நடை ,மற்றும் அனுபவ பகிர்வு ,படிக்க சுவாரசியமா இருக்கும் .

வான்கா -நல்ல சுவாரசியமான புத்தகம்

அன்புள்ள தியோவுக்கு -வான்கா எழுதிய கடிதங்கள்

...

நேற்று விடுபட்ட சில முக்கிய நாவல்கள்

1-பசித்த மானிடம் -கரிச்சான் குஞ்சு -மிக நல்ல நாவல் ,எல்லோரும் படிக்கலாம்

2-புதியதோர் உலகம் -கோவிந்தன் ,ஈழத்தின் மிக முக்கியமான நாவல் .

3-போர் உலா -மலரவன் ,எனக்கு பிடித்திருந்தது ,காரணம் அதன் உண்மை .உண்மையான போராளியின் மனம்

4-இரண்டாம் இடம் -எம் .டி ,வாசுதேவன் நாயர் .பீமனின் பார்வையில் மகாபாரதம் ,ரொம்ப சுவாரசியமான முக்கியமான புத்தகம் .

5-இது தான் என் பெயர் -சக்கரியா

6-ம் -ஷோபா சக்தி -நல்ல புனைவு .

7-பசி -நாட் ஹம்சன் -எனக்கு ரொம்ப பிடித்த நாவல் .

8-கொலம்பஸின் வரைபடங்கள் -யோ .கர்ணன் -எனக்கு பிடித்த கதை சொல்லி

9-அ .இரவி -காலமாகி வந்த கதை -முக்கியமான பதிவு ,எனக்கு பிடித்த நாவல் .

10-நினைவுப் பாதை -நகுலன் -முக்கியமான நாவல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக