புதன், 28 செப்டம்பர், 2016

ஆளில்லாத காடுகளை காதலிக்கும் வனதேவதைக்கு



உனது எல்லைகளுக்குள்
மரங்கள் குழநதைகளாயிருக்கின்றனர்-அதனால்
மனிதர்கள் வெட்கத்துடன் 
உள்ளே நுழைவதில்லை

உனது தாய்மையின் தகிப்பில் -காடு
நிம்மதியாக உறங்குகிறது
அதன் சப்தங்கள் அதன் எல்லையைத்
தொடுகின்றன
அதன் பனிப் பொழிவுகள்
மலர்களை அவிழ்க்கின்றன .

உனது காட்டில் மட்டும் -
ஆறுகளின் கதவுகள் எங்கும்
அடைத்துக் கொள்வதில்லை
பூக்களின் மகரந்தங்கள்
எதிலும் சிதறுவதில்லை .

நீ பறவைகளின் சரணாலயமாய்
கிடக்கின்றாய்
உனது காடே ,காதலில் மிதக்கின்றது
அதன் வாசல்களை
யாரும் கடந்தால் ,செல்தலுமில்லை
திரும்புதலுமில்லை.

published on -kalaimukam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக