திங்கள், 19 டிசம்பர், 2016

எலக்கிய கொசிப்


இலக்கியத்தைப் பற்றி கதைக்கத் தொடங்கியதும் பல்வேறு கேள்விகள் பல்வேறு சந்தேகங்கள் முன் பல நண்பர்களால் எழுதப்பட்டிருக்கின்றது , பிரதானமாக அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதியிருப்பவர்கள் விஜயரட்ன எட்வினும் கௌதமியும் .
அவர்களின் கருத்துக்கள் ,
எட்வின் ,
இணையத்தில் – முகநூல்-மின்னிதழ்-வலைத்தளம்-புளொக்ஸ் – என்பவற்றில் விடயத்தைப் பார்த்தவுடன் எழுத வேண்டும் என்பது கடினகரியங்களில் ஒன்று.
அச்சுப்பதிவு போல வைத்துப் பார்த்து பார்த்து – அடிக்கோடிட்டு – குறிப்பெழுதி, எழுத முடியாத நிலை. மறுபுறம் பதிவிறக்கி வைத்து – ஆறுதலாக வாசித்துப் பின்னர் எழுதலாம் என்றால், அது இதுவரைக்கும் எனக்குச் சாத்தியமாகாத கலையாகவே இருந்து வருகிறது. எனவே, அவசர அவசரமாக எழுத வேண்டிய துர்ப்பாக்கியம். அதுவும் நன்று…
கவிதை பற்றி இரண்டே இரண்டுபெயரைக் குறிப்பிட்டு கட்டுயின் போக்கை சிதறியடித்திருக்கிறீர்கள். நிற்கட்டும்…1985 களில், தமிழல் இலக்கிய விமர்சமனம் பெரும் அறிவியல் துறையாக மட்டுமன்றி, படைப்பிலக்கியங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய துறையாகவும் இருந்தது. படைப்பிலக்கியகாரர் விமர்சகர்களை மையமாகக் கொண்டே இயங்கினார்கள். விமர்சனமே ஒரு படைப்பாகப் பார்க்கப்பட்டது!
ஈழத்தில்-யாழில், இலக்கிய விமர்சகர்கள் ஒரிருவர்தான் இருந்தனரெனினும் அவர்கள் முடிசூடா மன்னர்களாக இருந்தார்கள். கடும் கறாரான இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு, படைப்பிலக்கியகாரர்களை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருந்தார்கள். மறுபுறம் ‘கோபுரத்தில்’ வைத்துப் போற்றியதும் உண்டு. முற்போக்கு-பிற்போக்கு என இரண்டு அணியாக இலக்கியம் – இலக்கியவிமர்சன உலகம் இயங்கியது. அதற்கப்பால் நற்போக்கு அணியும் உருவாகியது என்றால் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
இலக்கிய வாசிப்பு-இலக்கியத் தேடல்-இலக்கிய விமர்சனங்கள்-கலந்துரையாடல்கள் எனக் கொஞ்சப் பேராவது அப்போதிருந்தார்கள். எங்கள் சிலரின் குறிப்பிடத்தக்களவு காலம் அதற்காகவே செலவிடப்பட்டது. சிலர் மிகத்தீவிரமாக – அதுதான் வாழ்வு என ஈடுபட்டார்கள். நாங்கள் கற்றுக்குட்டிகள். அனால் நாங்கள் இலக்கியங்கள் – இலக்கிய விமர்சனங்கள் குறித்து ஈடுபாட்டுடன் இருந்தோம். இலக்கியங்கள் எங்களை ஈர்த்தது. இலக்கியங்கள் எங்களை ஈர்க்கும் வகையில் புதுமைகளை செய்துகொண்டிருந்தது அப்போது.
தற்போது நிலைமை மாறியிருக்கிறது. கடும் கறாரான விமர்சனக் கோட்பாடுகள் – விமர்சனத்தில் முடிசூடா மன்னர்கள்-அதற்குள் சிக்கப்பட்டு உழலும் படைப்பாளிகள் என எதுவும் இல்லை! படைப்பிலக்கியம் எல்லாவற்றையும் பிய்த்துதறிக் கொண்டு – வெளிவந்து கொண்டிருக்கிறது. இது எழுத்துக் காரர்களின் காலம் போலும். விமர்சகர்களின காலமல்ல. வாசகர்களின் காலமுமல்ல என்பதுவும் கவலைதரும் உண்மையே.
என்ன நடக்கிறது என்பதை நின்று நிதானித்து செல்லக்கூடிய காலமல்ல இது. எழுதுவுதும் – வெளியிடுவதும் என்பதற்கான காலம். மீறிச் சிலர் படைக்கிறார்கள். அவை பேசப்படுகிறது – அவதானிக்கப்படுகிறது.
தற்போது பொதுவில் இலக்கியங்கள் என்று எதனையும் வாசிப்பதில்லை. நிலைமை மாறிப்போய்விட்டது. இலக்கியம் புதிதாகப் படைப்பதில்லை என்னும் போது, இலக்கியப் படைப்பில் புதுமை இல்லை என்கிற போது, இலக்கியம் நீண்ட காலமாக ஒரே அச்சில் சுழல்கிறதாகத் தெரிகிற போது, இலக்கியம் மனதைத் தொடாத போது, இலக்கியம் ஒரு புது அனுபமாக இல்லாத போது, இலக்கிய அக்கறை குறைந்து – இல்லாமலே போய்விட்டிருக்கிறது.
அப்போது இலக்கிய வாசிப்பும் மனக்கிளர்ச்சியை ஊட்டிய இலக்கியங்கள் இன்று மீள வாசிக்கிற போதில், அவ்வாறான உணர்வை தரவுமில்லை!
இளமைக் காலத்திற்கும் – முதிர்ச்சி – முதுமைக் காலத்திற்கும் இடையில் வேறுபாடகள் எறப்படுவதுமுண்டோ தெரியிவில்லை. இதற்;கு மேலாக திரைப்படங்கள் – குறுப்படங்கள் – விடீயோ கிளிப்புக்கள் என்பவற்றின் வருகை மாற்றத்தையும் ஏற்படுத்தியிமிருக்கிறது.
இலக்கியம் சமூக மாற்றத்திற்கானது என்ற கோட்பாடு இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிற நிலையில் இலக்கியங்கள் மீதான அக்கறையும் குறைந்து போய்விட்டுள்ளது! மாறாக நாம் அறிவியல் அதுவும் அரசியல் – அரசியலைத் தீர்மானிக்கிற சமூக-பொருளாதாரம் குறித்த அறிவியலின் பால் ஈடுபாடு காட்ட வேண்டியிருக்கிறது. சமூக அக்கறையானது, ஒரு கட்டுரையில் இலக்கியம் தருகிற உணர்வை-மனக்கிளர்ச்சியை தரும்போலுள்ளது. கூடவே தெளிந்த பார்வையையும் தருகிறது
விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிற சில இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்ற உணர்வுண்டு. ஆனால் பழைய காலத்து இலக்கிய வாசிப்பிலிருந்த அவா தற்போதில்லை. வாசிக்காது விட்டால் வருகிற பெருங்கவலை-தேடியோடி வாங்கிப்-பெற்று வாசிக்கிற அவதி எதுவும் தற்போதில்லை.
எல்லாவற்றையும் மீறி, மனதை நெகிழ வைக்கிற – மனக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிற படைப்புக்கள் படைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள் படைப்பாளிகள்..
எனினும் இலக்கியத்தின் மூலம் சொர்க்கத்துக்குப் போவதெப்படி என்ற கேள்வியை தொடர்வோம்.
விஜய்..
//
கௌதமி ,



கிரிஷாந்த் இலக்கியம் பற்றிய உரையாடல் ஒன்றைத் தொடங்கியிருக்கின்றார். அது பற்றி இன்றுதான் படிக்க முடிந்தது. கவிதை பற்றிய கேள்விகளோடு அந்த உரையாடல் தொடங்கியிருக்கின்றது. நல்லது. என்னிடமும் இது பற்றிய கேள்விகள் நிறைய உண்டு. சில மாதங்களுக்கு முன்னால் எங்களுடைய துறை சார்ந்து ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ஒரு பெண் கவிஞர் (அப்படித்தான் சொன்னார்கள்) அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வை நானே தொகுத்து வழங்கியதால் என் கருத்து நிலையை அந்த இடத்தில் வெளிப்படுத்த முடியாது போனது. அவருடைய 2 கவிதைத் தொகுப்புக்களை அதற்கு முன்பு படித்தேன். அநேகமான வரிகள் தமிழ் சினிமா பாடல்களின் சாயலில் எஞ்சியவை படைப்பு நிலையில் மிகப் பலவீனமானவையாகவும் மொழிநடை சார்ந்தோ கருத்தியல் சார்ந்தோ எந்த வித அழகியலும் இல்லாத வரிகளாகவே இருந்தன. அந்த நிகழ்விற்கு முதல் வாரம் அவருடைய கவிதை நூல் எங்கள் துறை சார்ந்த மாணவர்களுக்கு விலைக்கு வழங்கப்பட்டிருந்தது. அநேகமானவர்கள் அதை படித்திருந்தனர். அங்கு இடம்பெற்ற விமர்சன உரையிலும் அந்த கவிதை நூல் பற்றிய புகழ் மாலைகள் அநேகமாக இடம்பெற்றன. இறுதியாக ஒரு மாணவன் மட்டும் எழுந்து ‘உங்கள் கவிதைகளில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் எழுதியவை எல்லாம் ஏற்கனவே தமிழில் நிறையவே உள்ளன. என் உங்களால் ஒரு படைப்பு நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை.. என்னால் அவற்றை கவிதைகளாகவே ஏற்க முடியாது.” இவ்வாறு கூறினான். இதற்கு அந்தப் பெண் கவிஞர் இறுதியாகப் பதில் அளிக்கையில் “நான் எழுதுவது சாதாரண மக்களுக்கானது. அது அவர்களுக்கு விளங்குகின்ற மொழியிலேயே எழுதப்பட வே்ண்டும். புரியாமல் எழுதுவதன் மூலம் நாம் எதை சாதித்து விட முடியும்? சாதாரண மக்களின் பிரச்சனைகளை சொல்வதற்கு சாதாரணமான மொழிநடையை போதுமானது. மிகைப் படுத்திய வார்த்தைகள் எதற்கு?”
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம். இந்த நிகழ்விற்கு முன்னும் பின்னும் எனக்கு இலக்கியம், கவிதை தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் இன்னும் தீர்க்கப்படாமல்தான் இருக்கின்றது.
1.எது கவிதை?
2.கவிதைக்கென்று இலக்கணங்கள் உள்ளதா?
3.சாதாரண மக்கள் எனப்படுவோர் யார்? அவர்கள் இலக்கியம் படிக்கின்றார்களா?
4.அச்சு ஊடகமான பத்திரிகைகளில் கவிதைக்கென ஒதுக்கப்படும் பக்கத்தில் எழுதப்படுபவை அனைத்தும் கவிதைகளா?
5.கவிதையெனில் தொடர்ந்தும் கவிதைகளின் தரம் பற்றிய மக்கள்(பத்திரிக்கை வாசகர்) மன நிலை என்ன?அது கவிதை இல்லையெனில் என் இதுவரை அது பற்றிய கேள்விகளையோ உரையாடல்களையோ தொடங்கவில்லை.?
6.ஒரு படைப்பை புத்தக வடிவில் கொண்டுவந்த பிறகு அது சாதாரண மக்களுக்கானது என்னும் வாதம் எவ்வளவு தூரம் பொருத்தமானது?
7.எத்தனை கவிதைகள் மறு வாசிப்புச் செய்யப்படுகின்றன?
8.முகப்புத்தகத்தில் இடப்படும் ஒன்றன்கீழ் ஒன்றான வரிகள் அடங்கிய பதிவுகள் அனைத்தும் கவிதையெனப்படுமா? (என்னையே நான் கேள்விக்குட்படுத்துகின்றேன்)
கொஞ்ச நாளைக்கு முன்பு பழைய பேப்பர் கட்டிங்குகளை படித்துக் கொண்டிருந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பான மித்திரன் பேப்பரில் கவிதையென்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டிருந்தவற்றை படித்துப் பார்த்தேன். அதை ஒரே வரியில் தூக்கிப்போட்டால் சாதாரண உரையாடலைப் போல் இருக்கும். அதே பேப்பரில் சிறுகதை என்ற அடையாளப்படுத்தலுடன் ஒரு கதை. அதன் ம் உடைவு இவ்வாறு இருந்தது
‘உண்மைதான் மீனாவைப் போல் எத்தனையோ பெண்கள் கண்மூடித்தனமாகக் காதலுக்காக உயிரையே விடுகின்றனர்.பெண்களே மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்யாதீர்கள். உங்கள் மனதை நீங்களே மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.’
சின்ன வயசில படிச்ச நீதிக்கதைகளில் கூட ஒரு படைப்பாக்கம் இருக்கும். கதைகளைக் கேட்டே வளர்ந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் நாம். நம்மால் ஒரு பத்திரிகைக்கு அனுப்பும் கதையை கதைப்போக்கில் எழுதமுடியவில்லை என்பது வருந்தத் தக்கது.
இதையெல்லாம் கூட சகித்துக் கொள்ளலாம். 5 வருடத்துக்கு முன்பு படித்த அதே கவிதைப்பக்க வரிகளின் பாணியே இப்பொழுதும் கூட பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றது என்பது என்னமாதிரியானதொரு நிலை?
நீயென் இதையெல்லாம் கேட்கின்றாய் என்று எவராவது கேட்பீர்களேயானால் ‘நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன். காசு கொடுத்து பேப்பர்களை சிற்றிதழ்களும் வாங்கி அதில் இப்படியான எழுத்துக்களை படித்து சலிப்படைந்து நானே எழுதிவிடலாம் என்ற விஷப் பரீடசையில் இறங்குமளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றேன்.
இன்னும் சாதாரணமாக வரிவரியாகக் கவிதைகளும் வெறும் ஒரு ஊரிலே கதைகளைத்தான் எழுதுவோம் என்பவர்கள் நல்ல டயரியையோ அல்லது முகப்புத்தகத்திலோ பரீட்ச்சார்த்த முயற்சிகளையோ மேற்கொள்ளலாம். அதை விடுத்து புத்தகங்களை அச்சேற்றி அதை காசு கொடுத்து வாங்கி படிக்கும் என் போன்ற வாசகர்களை ஏமாற்றுவது பெரும் பாவம் என்பதைக் கவனத்தில் கொள்க.
அண்டைக்கொருநாள் கவிதை பற்றிய உரையாடல் வந்தபோது கபில் கிரியினுடைய கவிதை வரியான
“வீடென்பது பேறு” என்பதை விடுமுறைகளில் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் நினைத்துக் கொள்வதாகக் கூறினான். என்ன ஆச்சர்யம் நானும் அதே வரிகளை அம்பனைச் சந்தியைக் கடக்கும் இரவுகளில் முணுமுணுத்து கொண்டுதான் செல்வேன்(அதன் அர்த்தம் வேறாக இருப்பினும் இரு வேறுபட்ட வாசகருக்கு ஒரே அர்த்தத்தை கொடுத்திருக்கின்றது.
). அதைவிட எந்த யார் என்னை விட்டுப் பிரிந்தாலும் உடனே ஆதியின் “பறவைகளே கூடிழத்தலே ஞானம்’ வரிகள் மனதுக்குள் ஓடும். அப்போதெல்லாம் எனக்கு அந்த வரிகள் பெரும் ஆறுதலாய் இருக்கும். அதுபோல்தான் பிரமிளின் அத்தனை கவிதைகளும் எனக்கு மயிலிறகுகள். மனுஷ்யப்புத்திர்னின் சம்மதம் என்று சொல் கவிதையை என் தோழியொருத்திக்கு படித்துக் காட்டினேன் அழுதே விட்டாள். அந்தக் கவிதைக்காக மட்டும் அவரை வெகுவாகப் பிடித்துப் போனது. அதற்குப் பின் நான் பதிந்த பதிவுகள் அனைத்திலும் மனுஷ் இருந்தார். நான் அதைக் கூச்சமின்றிக் கூறுவேன்அவருடைய ஒரு கவிதை என்னைப் பலவித கோணங்களில் சிந்திக்க வைத்தது. அது ஒரு சாதாரண கவிதை தான். அதன் வாசகர்களும் என்னைப்போன்ற சாதாரண இளைஞர், யுவதிகள்தான். இருப்பினும் அந்தக் கவிதை என் மனதை பிசைந்தது. அது போல் சேரனுடைய
போ”ய் வா,
உடைந்த கண்ணாடி துண்டே
உனது அச்சம் வேறு
எனது அச்சம் வேறு”
இந்த வரிகளும் அடிக்கடி வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கும் வரிகள்.
இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன்.
கவுதமி .
இது
போக விருதுகள் பற்றியும் யதார்த்தன் எழுதியிருக்கும் துக்கக் குறிப்பு .
யதார்த்தன் ,

( யதார்த்தன் )
சமீபத்தில் மெலிஞ்சி முத்தன (Melinchi Muthan) சந்திச்சம் . மனுஷன் கூத்து பற்றி அற்புதமான விசயங்கள் சொன்னார். அவரும் அவருடைய தமயனும் கூத்து பாடல்களை பாடிக்காட்டிச்சினம். சிலிர்த்து போய் உட்கார்ந்திருந்தோம். அவர்களுக்குள்ள இருந்த கலையின் உம்மத்தமும் ஆன்மாவும் அத்தனை அற்புதமாக இருந்தது.
கதைச்சுக்கொண்டு இருக்கும் போதே ‘ இலக்கியம்’ (இலக்கு +இயம்) எண்ட சொல்லில உங்களுக்கு உடன் பாடிருக்கான்னு கேட்டார். தமிழ்ல்ல உந்த சொல் எப்ப புழக்கத்தில வந்ததுன்னு தெரியேல்ல, அனேகமா 19 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு வந்திருக்கணும்ன்னு நினைக்கிறன்.
அதென்ன மசிர் இதுக்கு மட்டும் ‘இலக்கு ‘ வேண்டி கிடக்கு எல்லாக்கலைக்கும் அன்புதானே இலக்கு.
‘ஓநாய் குலச்சின்னம்’ மாதிரி ஒரு அற்புதத்த நிகழ்திட்டு ஜியாங்ரோங் எண்டுற மனுஷப் எங்க போனார் என்ன ஆனார்ந்னு கூட தெரியேல்ல. சீனால சிவப்பு புத்தகத்துக்கு பிறகு அதிக பிரதிகள் போன ஒரு பிரதி அதுதான் . உலகம் முழுக்க அவரை கொண்டாடிட்டு இருக்கு ஆனா அந்த மனுஷன்ர ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தான் கிடைக்குது. மனுஷன் தனக்கான வாழ்க்கைய எங்கையோ போய்ட்டுது.
நான் எல்லாம் சின்ன கதைய எழுதிட்டு பிக்சன் ரைட்டர்ன்னு சொல்லிட்டு திரியிறன் . வெக்கமே இல்லாம. கிரிஷாந்அடிக்கடி கேப்பான் நீ எல்லாம் என்ன எழுதிக்கிழிச்ச ? எழுத்தாளன்னு சொல்ல ந்னு! பகீர்ன்னு இருக்கும். ஏன்னா எங்க சுட்டு எத சொருகி நாம எழுத்தாளன் ந்னு காட்டிக்கிட்டம்ன்னு நமக்கு மட்டும் தானே தெரியும்.
இண்டைக்கு பாத்தா தமிழ் எலக்கிய பரப்பு விருதுக்கு அடிபடுது . த்தா என்ன மயிர எழுதி கிழிச்சிட்டம்ன்னு விருது நமக்கு ?
ஒரு வேளை எலக்கியத்தில ‘இலக்கு’ மசிர் எண்டுறது இந்த விருது மாதிரி அங்கீகாரம் தானோ ? விஜய் டீவிக்காரன் மாதிரி கூப்டு எல்லாருக்கும் விருது குடுங்கடா வாங்கி பெட்ரூம்ல வைச்சுக்கிறம்.
இமையம் ஒருக்கா சொன்ன மாதிரி ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ந்னு ஒருத்தன் 2000 வருஷத்துக்கு முதல் பாடினது இண்டைக்கு வரைக்கும் நிக்குதடா, அழிக்கவே முடியாத ஒரு சொல்ல கண்டு பிடிச்ச அவனும் கவிஞன் , முட்டா பயலே நீயும் கவிஞனாடா?
-ய-
இன்னொரு உட் பெட்டிக் கேள்வித் தொகுப்பு .
இலக்கியம் இன்னும் உயிரோட இருக்கா??இறந்தால் மறு ஜன்மம் அதுக்கு உண்டா?
இருந்தால் எது இலக்கியம்?
கவிதைகளின் பணி என்ன?
—–
இப்படியா நீண்டு கொண்டிருக்கும் இலக்கிய உரையாடலே எமது காலத்தில் குறைவென்பது நமது இலக்கிய ரசனையை அறிவை கொண்டாட்டத்தை மட்டுப் படுத்தும் செயல். இது எவ்வளவு குதூகலமாயிருக்கிறது. தெளிவாக உள்ள போதும் போதையிலும் கூட இலக்கியத்தையே உரையாடும் நமக்கு வேறென்ன வேண்டும் . கேவலமாக திட்டிக் கொண்டிருந்தாலும் , இலக்கியத்தில் அது ஒரு வகை உரையாடல் தான். நாம் நாம் நம்பும் விஷயத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
மேலே எழுந்த உரையாடல்களுக்கு யாரும் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் , அவற்றையும் தொகுத்துப் போடுவோம் . எவ்வளவோ அரை குறை விடயங்களுக்காக நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கும் நாம், இலக்கியத்திற்கு நேரமொதுக்கி உரையாடுவோமே . என்ன கெட்டு விடப் போகிறது
கிரிஷாந்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக